Home உலகம் லிபிய கடலில் தத்தளித்த 117 சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் மீட்பு..

லிபிய கடலில் தத்தளித்த 117 சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் மீட்பு..

by admin

லிபியாவின் மேற்கு கடற்பகுதியில் ரப்பர் படகில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்ட 117 சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களை கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்  ஆபிரிக்க நாடுகளில் உள்நாட்டு யுத்தம் மற்றும் வறுமை காரணமாக பலர் அங்கிருந்த தப்பி பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூலம் படகுகளில் செல்லும் போது பல சமயம் விபத்துக்குள்ளாகி பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுவதனால் லிபிய கடற்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லிபியாவின் அல் கோம்ஸ் கடற்பகுதியில் நேற்று அதிகளாவன சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் ஒரு ரப்பர் படகில் சென்றுகொண்டிருந்த போது அவர்களின் படகு கடலில் தத்தளிப்பதனை கவனித்த லிபிய கடலோர காவல் படையினர், உடனடியாக அங்கு சென்று அனைவரையும் மீட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு ஆபபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்டவர்களில் 84 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 18 குழந்தைகள் என 117 பேர் உள்ளடங்குவதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் உள்ள அகதிகள் மையத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More