Home இலங்கை தந்தை – மகனை வாளினால் வெட்டி தாக்குதல் நடாத்தியவர் கைது

தந்தை – மகனை வாளினால் வெட்டி தாக்குதல் நடாத்தியவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்தி , வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இளைஞன் மீதும் அவரது தந்தை மீதும் வாளினால் வெட்டி தாக்குதல் நடாத்தியதன் பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை உடுவில் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தை ஐந்து பேர் கொண்ட குழுவினரே மேற்கொண்டனர் என முறைப்பாட்டாளர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More