Home இலங்கை 2 ஆம் இணைப்பு – கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது..

2 ஆம் இணைப்பு – கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது..

by admin

சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நிலையில் 26 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் (05-04-2019) கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை சுற்றி சோதனையிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படடவர்களில் சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றான். இவர்கள் மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது.

Apr 5, 2019 @ 14:20


சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேரை கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இது தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More