முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தாபய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்னும் நிலையில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment