Home உலகம் 24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரமாக லண்டன் :

24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரமாக லண்டன் :

by admin

காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது.

வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து நகரத்தின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும் எனவும் அப்படி இல்லாவிட்டால் அன்றாடம் அபராதம் விதிக்கப்படும் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெட்ரோல் மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்கள் நாள் ஒன்றுக்கு 12.50 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் பாரவூர்தி , பேருந்து போன்றவை 100 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகன சாரதிகள் வண்டியின் புகை தரநிலைகளை, லண்டன் போக்குவரத்துத்துறை செயல்படுத்தும் இணையகருவி மூலம் சோதனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் கொடிய நைட்ரஜன் ஒக்ஸைட் கலக்க அதிக அளவில் வாகனங்களின் புகையே காரணமாகும் எனவும் இதனால் ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் மக்களை எளிமையாக தாக்குகின்றன எனவும் இதனை தடுக்கவே வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More