Home இலங்கை இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இந்திய மீனவர்கள் நால்வர், ஒரு படகுடன் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்வளத்துறையிடம் முறையான மீன்பிடி டோக்கன் பெற்று 562 விசைப்படகுகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தொழிலுக்கு புறப்பட்டிருந்தனர்.

அதில் தங்கச்சிமடம் அந்தோணியார் புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி அவரது மகன் அமலன் 40ஃ19 என்பவருக்கு சொந்தமான  IND TN 10 mm 110  என்ற எண்ணுள்ள விசைப்படகு நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இன்று (9) அதிகாலை 2.00 மணியளவில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

குறித்த விசைப்படகு மற்றும் படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கச்சி மடத்தை சேர்ந்த ரெனிஸ்டன் மற்றும் இராமேஸ்வரத்தை சேர்ந்த முருகேஷன், முனியசாமி, சுப்பையா ஆகிய மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More