Home உலகம் தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு செல்பி எடுத்தால் மரண தண்டனை

தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு செல்பி எடுத்தால் மரண தண்டனை

by admin

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் முன்பு செல்பி படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் உள்ள மாய்காவோ என்ற பிரபல சுற்றுலா தலமான கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளதனால் அங்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.

இதன் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி செல்பி படங்களை எடுப்பதனால் அது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையம் முன்பு செல்பி படம் எடுக்க மாகாண அரசு தடைவிதித்தது.

எனினும் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு செல்பி படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More