Home இந்தியா தெலுங்கானாவில் நூதனமான முறையில் தங்கம் கடத்தியவர் கைது

தெலுங்கானாவில் நூதனமான முறையில் தங்கம் கடத்தியவர் கைது

by admin

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தினை நூதனமான உடையில் மறைத்து கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, டோகாவில் இருந்து வந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

இதன்போது அந்த நபர், தங்கத்தை உருக்கி, பொலித்தீன் பையில்; அடைத்து அதனை உடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 1.16 கிலோ கிராம் எடை கொண்டது எனவும் அதன் பெறுமதி 36 லட்சத்து 99 ஆயிரத்து 782 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து, சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More