Home இலங்கை டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர் :

டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர் :

by admin

பிரபல பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 6 பேரில் ஒருவர் மாகந்துரே மதூசின் உறவினர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 6 பேரும் இன்று அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செனவிரத்ன மாவத்தகே தயான் புத்திம பெரேரா, மொஹமட் பதியுதீன் மொஹமட் ரியாஷ், ரணசிங்ககே சுரேஷ் லசந்த, யோன் மெரங்க சைமன் ஹேவகே ரூபதாச, மொஹமட் ஜபீர் மொஹமட் ஹிப்ரே, சமரசிங்ககே நிலான் ரொமேஷ் ஆகியோரே இவ்வாறு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களாவர்.

மாகந்துரே மதூசுடன் மொத்தமாக 21 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்களில் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More