Home இலங்கை பிற மதங்களை இழிவுபடுத்தவில்லை…

பிற மதங்களை இழிவுபடுத்தவில்லை…

by admin

பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் தாம் செயற்படவில்லை எனவும் , அதற்கான தேவை தமக்கு இல்லை எனவும் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்கள் ஐக்கியம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்றுவரை வரையில் நடைபெறும் மத நிகழ்வில் , ஏனைய மதங்களை நேரடியாக இழிவு படுத்தபடுகின்றது எனவும் , சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என பரப்புரை செய்கிறார்கள் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் காவற்துறையினரிடம் முறையிட்டிருந்தார். எனவும் அதனால் அந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்கள்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

தாம் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. அதற்கான தேவையும் தமக்கு இல்லை. பிற மதங்களை இழிவு படுத்தும் எந்த செயற்பாட்டிலும் தாம் ஈடுபடவில்லை. பிற மதங்களை இழிவு படுத்தும் எந்த கருத்துக்களையும் நாம் வெளியிடவில்லை. உரிய தரப்பினர்களிடம் உரிய அனுமதிகளை பெற்றே நிகழ்வுகளை நடாத்தியதாகவும், திட்டமிட்ட படி எமது நிகழ்வுகள் நடைபெற்றன எனவும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More