Home இலங்கை வெள்ளாங்குளம் பண்ணையை அரசாங்கம் கையகப்படுத்தும் நடவடிக்கை தோல்வி.

வெள்ளாங்குளம் பண்ணையை அரசாங்கம் கையகப்படுத்தும் நடவடிக்கை தோல்வி.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணைப் பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது .

வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கயூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம்(18) குறித்த காணிகளை பார்வையிடுவதற்காக இலங்கை கயூ கூட்டுஸ்தாபன தவிசாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலையிட்டு குறித்த 275 ஏக்கர் காணிகளும் மாந்தை பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்குவதற்கு என பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்ட நிலையில், கயூ கூட்டுத்தாபனத்திற்கு வழங்கமுடியாது எனவும் கட்டாயத் தேவை இருப்பின் வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட 275 ஏக்கர் நிலத்தில் கயூ மரங்கள் காணப்படுவதால் அரச அனுமதிப்பெற்று அக்காணிகளை கயூ கூட்டு தாபனத்தின் கீழ் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முரண்பாடு ஒன்று தோற்றம் பெற்ற நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகளை உடனடியாக பிரதேச செயளாலரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது.

அதே நேரத்தில் கயூ கூட்டுத்தாபனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணைப் பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் காணிகளை பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கயூ கூட்டு தாபனத்திற்கு வழங்க அனுமதி பெற்று தர முயற்சி எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படது. இந்த நிலையில் குறித்த 275 ஏக்கர் பண்ணை நிலத்தையும் கையகப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டது.

குறித்த சம்பவ இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மன்னார் நகரசபை தவிசாளர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடதக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More