Home இலங்கை இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை..

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை..

by admin


இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக, இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரணைதீவு மக்களின் வாழ்வியல் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் சி.கனகராஜ் தலைமையில் மனித உரிமை ஆணைக்குழுவினர் கடந்த மாதம் பயணம்  ஒன்றை மேற்கொண்டு இரணைதீவிற்கு சென்றனர்.

குறித்த பயணத்தின் போது இரணை தீவு மக்களுடன் இது வரை மீள்குடியேற்றத்தின் பின்னர் பூர்த்தியாக்கப்பட்ட, பூர்த்தியாக்கப்படாத விடையங்கள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில்  இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மக்களினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர், கிளிநொச்சி அரசாங்க அதிபர், மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் கிராம சேவையாளரின் சேவைகள், பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் ,சமுர்த்தி கொடுப்பணவுகள் வாழ்விடம், நீர் தேவைப்பாடு, போக்குவரத்து,தபால் சேவை,மின்சாரம், சுகாதர திணைக்களத்தின் செயற்பாடு,வைத்தியத் துறைம மத வழிபாடுகள் தொடர்பாக மக்களால் தெரிவிக்க பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கையினை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தஅறிக்கையினை பூநகரி பிரதேசச் செயலாளர், கிளிநொச்சி அரசாங்க அதிபர் , மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர் எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More