Home இலங்கை யாழிலும் ஒருவர் கைது

யாழிலும் ஒருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவரை காவல்;துறையினர் கைது செய்துள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வந்தது. தீடிரென ஊரடங்கு அமுலுக்கு வந்ததால் ,யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறந்திருந்தோர் , பல்வேறு தேவைகளுக்காக நகர் பகுதிக்கு வந்திருந்தோர் அவசர அவசரமாக வீடு திரும்பினார்கள்.

அதனால் யாழ் நகர் பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு சன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அந்நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பயண பொதியுடன் ஒருவர் நடமாடியுள்ளார்.

அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் யாழ், காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்;துறையினர் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளர்h.
அத்துடன் அவர் , வெளிமாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தமையால் சந்தேகத்தில் கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More