Home இந்தியா தமிழக காவல்துறைக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு

தமிழக காவல்துறைக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு

by admin


தமிழகத்தில் காவல்துறைக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஒருவர் தனக்கு சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறையினருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், ஒதுக்கீடு நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விதிகளை மீறி வேண்டப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி, வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு வாரங்களில் இணையதளம் உருவாக்கி, அதனூடாக விண்ணப்பங்களைப் பெற்று, முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். .

மேலும், குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அடையாளம் காணும் வகையில் உயரதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து அவ்வாறு இனங்காணப்படுபவர்களை 60 நாட்களில் குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு கடிதம் அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளார்.

#tamilnadu  #policeflats

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More