Home இந்தியா ஆபத்தை உணராமல் காமராஜ் சாகர் அணைக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை வேண்டும்

ஆபத்தை உணராமல் காமராஜ் சாகர் அணைக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை வேண்டும்

by admin


ஊட்டி காமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில இடங்களில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் சில சுற்றுலா பயணிகள் தடுப்புகளை தாண்டி காமராஜ் சாகர் அணைக்குள் அத்துமீறி இறங்கி செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் நிற்கும் போது, கால் இடறினால் அணைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது.

காமராஜ் சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 49 அடி ஆகும். தற்போது தொடர் மழை பெய்து வருவதால், ஈரப்பத மாக உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகளின் கால் இடறும் நிலை காணப்படுகிறது. எனவே, ஆபத்தை உணராமல் அணைக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுக்க அப்பகுதியில் தகவல் பலகை வைப்பதோடு, அத்துமீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

#ooty #kamarajsagardam # tourists

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More