Home இலங்கை வடமராட்சியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

வடமராட்சியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து இன்று சனிக்கிழமை மாலை பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன் ஒருவா் அத்திவாரம் தோண்டியபோது அத்திவார குழிக்குள் இருந்து ஒரு பிளாஸ்டிக் பரல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினர் பிளாஸ்டிக் பரலை சோதித்தபோது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடா்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ் பிளாஸ்டிக் பரலுக்குள் இருந்து பெருமளவு வெடிபொருட்களை மீட்டுள்ளனா்.

 

#VADAMARADCHI #POLICE #POLICE #EXPLOSIVE

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More