Home இலங்கை வீதியில் சென்றவரிடம் சங்கிலியை அறுத்த கொள்ளையர் தப்பியோட்டம்

வீதியில் சென்றவரிடம் சங்கிலியை அறுத்த கொள்ளையர் தப்பியோட்டம்

by admin


நாட்டில் அசாதாரண நிலை காணப்படுகின்ற நிலையில் , அதிகாலை வேளை வீதியில் சென்றவரிடம் சங்கிலியை அறுத்துக்கொண்டு கொள்ளையர் ஒருவர் தப்பி சென்றுள்ளார்.

கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பழனியாண்டவர் ஆலய பூசகரின் சகோதரன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள குறித்த ஆலயத்திற்கு சென்றுள்ளார். அதன் போது , நீள கைசட்டையும் , நீள காற்சட்டையும் அணிந்தவாறு , முகத்தை மறைத்து துணி ஒன்றினை கட்டி தலைக்கவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் ஆலயத்தின் மேற்கூரையை காட்டி ஏதோ சொல்லி உள்ளார்.

பூசகரின் சகோதரன் வாய் பேச முடியாதவர் என்பதுடன் அவருக்கு காதும் கேட்காததால் , அவர் அந்நபர் காட்டிய திசையில் பார்த்து அதனை புரிந்து கொள்ள முயற்சித்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடினார். மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் அசாதாரண நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆலய வீதியிலும் மற்றும் ஆலயத்திற்கு அருகில் உள்ள பூசகரின் வீட்டிலும் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி.கமரா பதிவுகளை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#chain #escape #police #jaffna

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More