Home இலங்கை ஆபத்தான முறையில் வாகனத்தினைச் செலுத்தி மூவரின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு கடும் தண்டனை

ஆபத்தான முறையில் வாகனத்தினைச் செலுத்தி மூவரின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு கடும் தண்டனை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வான் சாரதிக்கு கடுமையான தண்டனை வழங்கியாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார்.

‘விபத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்து மூவரின் உயிரிழப்பை ஏற்படுத்தியமைக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், விபத்தில் உயிரிழந்த சிறுமி மற்றும் அவரது பாட்டனாரின் குடும்பத்துக்கு எதிரி 5 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் ஒரு வருட சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க வேண்டும்.

உயிரிழந்த முச்சக்கர வண்டிச் சாரதிக்கு 3 லட்சம் ரூபா பணத்தை எதிரி இழப்பீடாக வழங்கவேண்டும். அதனைச் செலுத்தாவிடின் ஒரு வருட சிறைத் தண்டனையைஎதிரி அனுபவிக்க நேரிடும். மேலும் 3 குற்றங்களுக்காக எதிரி தலா 2 ஆயிரத்து 500 ரூபா வீதம் 7 ஆயிரத்து 500 ரூபாவைத் தண்டமாகச் செலுத்தவேண்டும்.

எதிரியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாகத் தடை செய்யும் ஆணை மோட்டார் போக்குவரத்துத திணைக்களத்துக்கு நீதிமன்று வழங்குகிறது’ என்று நீதிவான்ஏ.எஸ்.பீற்றர் போல் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியாயர் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் முச்சக்கர வண்டியும்ஹைஏஸ் வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் பயணித்த ஹைஏஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் தடம் மாறி முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியது. அதனால் முச்சக்கர வண்டி அருகிலுள்ள வயலுக்கு தூக்கி வீசப்பட்டது.

விபத்தில் பாடசாலைக்கு முதன்முறையாகச் சென்ற ஆறு வயதுச் சிறுமி ராஜ்குமார் டனிஷ்ரா மற்றும் அவரது பாட்டனார் சிங்காரவேலு பாஸ்கரன் (வயது- 57) ஆகியஇருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முச்சக்கர வண்டிச் சாரதி ஜெயபாலன் துரைபாலசிங்கம் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர்;, ஹைஏஸ் வான் சாரதியைக் கைது செய்தனர். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுப்பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்தி மூவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தமை கவயீனமாக வாகனத்தைச் செலுத்தியமை ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமைமற்றும் விபத்தைத் தடுக்கத் தவறியமை ஆகிய 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சாரதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பெ காவல்துறையினர்;, hலிஸார் தாக்கல் செய்தனர்.

வழக்கின் எதிரி குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். அதனால் அவரது கைவிரல் அடையாளம் பெறப்பட்டது.

இந்த நிலையில் எதிரிக்கு தண்டைத் தீர்ப்பைக் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியது.

‘விபத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமையால் எதிரிக்கு வழங்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையை ஒத்திவைத்த தண்டனையாக மன்று வழங்கவேண்டும்’ என்று எதிரி சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.

‘விபத்துச் சம்பவமாக இருக்கலாம். ஆனால் இது பாராதூரமானது. மூவரின் உயிரிழப்புக்கு காரணமாக இந்த விபத்து அமைந்துள்ளது. விபத்துக்கள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் அவதானமாக வாகனத்தைச் செலுத்த வேண்டிய பொறுப்பு சாரதிகளுக்கு உண்டு.

வீதியில் சிறுவர்கள் பயணிப்பார்கள். இந்த விபத்திலும் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பொறுப்பற்ற விதத்தில் வாகனத்தை எதிரி செலுத்தியுள்ளார். அதனால் அவரது தண்டனையைக் குறைக்க மன்று எண்ணவில்லை’ என்று நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் சுட்டிக்காட்டினார்.

#accident #punishment #court #driver

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More