Home இலங்கை ஊடகவியலாளர் சிவராமின் நினைவு நாளும் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான அஞ்சலி நிகழ்வும்

ஊடகவியலாளர் சிவராமின் நினைவு நாளும் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான அஞ்சலி நிகழ்வும்

by admin


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி டி. சிவராமின் 14ம் ஆண்டு நினைவு நாளும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நடைபெறவுள்ளது.

முன்னதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பொது சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து , நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து ,படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்படும்.

அதனை தொடர்ந்து கடந்த ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்கள் , ஊடக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்துமாறு யாழ்.ஊடக அமையம் கேட்டுள்ளது.

 #sivaram #journalist #suicide #eastersundaylk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More