Home இலங்கை ஐ.எஸ். அமைப்பின் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட வீடு கொட்டாஞ்சேனையில் கண்டுபிடிப்பு

ஐ.எஸ். அமைப்பின் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட வீடு கொட்டாஞ்சேனையில் கண்டுபிடிப்பு

by admin


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் வீடொன்று கொட்டாஞ்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த, மெசஞ்சர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் இருந்தே குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரானினால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ். ஆமைப்பின் கருத்துக்கள் அடங்கிய இறுவெட்டுக்கள், மற்றும் தௌஹீத் ஜமா அத் அமைப்பினரின் தகவல்கள் அடங்கிய மடிக் கணினி ஒன்று, 12 கையடக்கத் தொலைபேசிகள், 5 கடவுச் சீட்டுக்கள் என்பன அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கையில் மத்திய நிலையம் ஒன்றினை முன்னெடுத்துச் செல்ல இடம் வழங்கியமை தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் தேடிவரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடமொன்று உள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#ISIS #house #eastersundaylk #suicideattack

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More