மட்டக்களப்பு காத்தான்குடியில்  இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில்,  விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30.04.19)  கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ரவவைகள், பெரும் திரளான கணினிகள், இறுவெட்டுக்கள் என்பனவும்  மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இலங்கையில்   இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (30.04.19) அதிகாலை தொடக்கம் சுற்றிவளைத்து பாரிய தேடுதல் வேட்டையினை நடத்திவருகின்றனர்  இந்தச்  சுற்றிவளைப்பு பகுதிக்கு வெளியில் இருந்தே அங்கிருந்து வெளியே ஒருவரையும் செல்ல விடாமல் வீடுவீடாக சோதனை நடத்திவருகின்றனர்.

இதேவேளை தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். #Kattankudy #srilanka #arrested #roundup #MLAMHizbullah #stf  #eastersundayattacksrilanka