Home உலகம் எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்

எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்

by admin

எவரெஸ்ட் மலையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்றியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்தது.

இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.  நேபாள அரசின் இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#rubbish  #nepal #Mount #Everest

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More