Home இலங்கை மன்னார் மாந்தையில் மர்மப்பொதியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு :

மன்னார் மாந்தையில் மர்மப்பொதியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாந்தை சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அடம்பன் பாலப்பகுதியில் காணப்பட்ட மர்மப் பொதியில் இருந்து கைத்தப்பாக்கி ஒன்றை படையினர் இன்று வியாழக்கிழமை (2) காலை மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மர்மப்பொதி ஒன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அடம்பன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.

விரைந்து செயல்பட்ட அடம்பன் காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரையும் அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தியதோடு குறித்த மர்மப் பொதியையும் சோதனை செய்தனர்.

இதன் போது பிளாஸ்ரிக் போத்தலில் கிறீஸ் நிறப்பப்பட்டு அதனுல் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி ஜப்பான் நாட்டு தயாரிப்பு என படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் அடம்பன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#mannar #manthai #gun

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More