Home இலங்கை மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அரசினதும்,முப்படையினரதும் பொறுப்பு

மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அரசினதும்,முப்படையினரதும் பொறுப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அரசினதும் முப்படையினரதும் பொறுப்பு என வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவியான க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இன்று(04) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தே போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ் பல்கலைகழக மாணவர்களின் கைது கவலையளிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் அம்மாக்கள் என்றவகையில் நாம் பெரிதும் வேதனைப்படுகின்றோம். இந்த மாணவர்கள் விரையில் விடுவிக்கப்படல் வேண்டும், அதனை ஊடகங்கள் ஊடாக கோரிக்கையாக ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம் எனத் தெரிவித்த அவர்

படங்கள் பதாதைகள் வைத்திருந்தார்கள் என்ற காரணத்தினால் பல்கலைகழக மாணவர்கள் கைது செய்யபட்டமை கவலைக்குரியது. எஞ்சிய இந்தப் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் மிக்க சூழலிருந்து தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

#kilinochchi #jaffnauniversity #students  #arrest #responsibility

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More