Home இலங்கை சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

சுண்டுக்குளி கல்லூரி அதிபர்,

இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம்.

புதன்கிழமை 8.5.19 பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்.

முகமது உமர் றியாஸ் (பிரதீப்)

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு – யாழ்.மாவட்டம். என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில், யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#chundukuligirlscollege #muslimcountry #christians #letter  #thowheedjamath

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More