Home இலங்கை குற்றங்களுடன் தொடர்பில்லையென்றால் மாணவர்களை உடனே விடுக்க வேண்டும்

குற்றங்களுடன் தொடர்பில்லையென்றால் மாணவர்களை உடனே விடுக்க வேண்டும்

by admin


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், அண்மைய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இல்லை என்றால், வழக்கைத் தொடராமல் உடன் அவர்களை விடுவிக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது உடனடியாக பயங்கரவாதிகள் முத்திரை குத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்றும் இது கடந்த ஆட்சியில் மறைமுகமாக இடம்பெற்று இந்த ஆட்சியில் வெளிப்படையாக இடம்பெறுவதே உண்மை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#sarathfonseka #jaffnauniversity #students #isis

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More