Home இலங்கை கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது:

கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது:

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் (இடியன்) வகை உள்ளூர் துப்பாக்கிகள் ஏகே ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி காவல்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் காவல்துறையினரும் படையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையின் இன்று ஈடுபட்டபோது அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் அவ்வீட்டிலிருந்தவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மேலும் இந்த சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் இலக்க தகடு ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பூநகரி காவல்துறையினர்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#kilinochchi #poonagari #arrest #roundup #gun

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More