Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை

by admin

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு வேலைத்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். புனரமைப்புப் பணிகளுக்காக முதற் கட்டமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஐந்து மில்லியன் ரூபாவும் நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு பத்து மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரு தேவாலயங்களின் புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை கடற்படை புனரமைக்கவுள்ளதாகவும் அதற்காக முதற் கட்டமாக பத்து மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி புனரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் முழுமையான நிதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

#seyonchurch #eastersundaylk #kochchikadechurch #rebuild

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More