Home இலங்கை பாராளுமன்ற வரைப்படங்களுடன் கைதானவருக்கு விளக்க மறியல் நீடிப்பு..

பாராளுமன்ற வரைப்படங்களுடன் கைதானவருக்கு விளக்க மறியல் நீடிப்பு..

by admin


பாராளுமன்றத்தினுள் பிரவேசிப்பதற்கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்கொடை கிரிமெட்டிதென்ன பகுதியில் கைது செய்யப்­பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் உத்தரவு நேற்று நீடிக்கப்பட்டுள்­ளது. பலாங்கொடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர்வு பிறப்பிக்கப்ப்ட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் வீடு கடந்த ஏபரல் 24 ஆம் திகதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.இதன்போது, பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான திட்ட வரைபடம், 2 ரவைகள், 13 சிம் கார்ட்கள் , 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் கடன் அட்டைகள் பலவும் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியை சோதனைக்குட்படுத்திய போது, குறித்த கப் வண்டியில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது.

கிரிமெட்டி தென்ன பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #eastersundayattackslk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More