Home இலங்கை பயங்கரவாதத்தை முறியடிக்க,  அமெரிக்கா செல்கிறது இலங்கை குழு…

பயங்கரவாதத்தை முறியடிக்க,  அமெரிக்கா செல்கிறது இலங்கை குழு…

by admin

 
பயங்கரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்குமிடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

குறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வியாழக்கிழமை அமெரிக்காவில் இடம்பெறவுள்ளதாகவும் இதற்காக இலங்கைக் குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக பயங்கரவாத முறியடிப்பு, பாதுகாப்பு மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட நாடுகடந்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு அதிகாரிகளும் இந்தோ-பசுபிக் மூலோபாயம், இலங்கை மற்றும் ஆசியப் பிராந்தியம், இராணுவ உறவுகள், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் இலங்கையின் அமைதிகாப்புக்கான உதவி, கண்ணிவெடிகளை அகற்றும் விடங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மெக்சிக்கோவுக்கு சென்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்துப் கலந்துரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #antiterrorism #eastersundayattackslk #usCounterTerrorism

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More