Home இலங்கை வவுணதீவு முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை!

வவுணதீவு முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை!

by admin

மட்டக்களப்பு வவுணதீவில் கடந்த நவம்பரம் மாதம், காவல்துறையினர் படுகொலையில் சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வீடு திரும்பிய அஜந்தன் தொலைபேசி வாயிலாக தம்முடன் உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். வவுணதீவு காவல்துறைப் படுகொலையை ஐ.எஸ் பயங்கரவாதிகள் உரிமை கோரியதை அடுத்து, முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.

குறித்த சம்பவத்துடன் எவ்வித்திலும் தொடர்பற்ற தமது கணவரை விடுவிக்குமாறு அஜந்தனின் மனைவியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் கொண்டு சென்றார். இதனையடுத்து முன்னாள் போராளி அஜந்தன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  #vavunathivupoliceattack

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More