Home இலங்கை பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றிய மௌலவிக்கு விளக்கமறியல்

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றிய மௌலவிக்கு விளக்கமறியல்

by admin


பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான உரையினை காணொளி மூலமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள மௌலவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மக்காவுக்கு சென்றுவிட்டு நேற்றையதினம் நாடு திரும்பும்போதே கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே நீதிவான் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

#maoulavi  #arrest #vavuniya

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More