Home உலகம் பாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்

பாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்

by admin


பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அதிகளாவான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குறித்த 5 நட்சத்திர விடுதியில் நேற்று மாலை பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 3 பயங்கரவாதிகள் காவலாளியை சுட்டுக் கொன்றதுடன் அங்கு தங்கியிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

#pakistan #5starhotel #shooting

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More