Home இலங்கை சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்தை வெளியிட்டமையினாலேயே சிலாபத்தில் பதற்றம் :

சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்தை வெளியிட்டமையினாலேயே சிலாபத்தில் பதற்றம் :

by admin

சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்துக்களை பதிவிட்டமையினாலேயே சிலாபத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன நல்லிணக்கத்தை சீரழிக்கும் வகையில் அவ்வாறு நடந்துகொண்ட நபரை கைது செய்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தோற்றுவித்து அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் குறித்த நபர் கருத்தினை பதிவேற்றியமையால் சிலாபம் நகரில் பொதுமக்கள் மத்தியில் சிறு முறுகல் நிலை தோன்றியது.

இதனால் அப் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு சென்ற இராணுவத்தினரும்,காவல்துறையினரும் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த முறுகல் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் உடன் அமுலாகும் வகையில் நாளை காலை 6 மணி வரை குறித்த பகுதியில் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 #Socialmedia #racistopinion  #Chilaw #curfew

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More