Home இலங்கை செஞ்சோலை வளாகத்திலும் சுடரேற்றி அஞ்சலி

செஞ்சோலை வளாகத்திலும் சுடரேற்றி அஞ்சலி

by admin

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொன்றொழிக்கப்படட  தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் இன்று முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது

வடமாகாண சபை  முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தினால் இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு  மாவட்டத்திலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை இடம்பெற்ற 21 இடங்களில் எதிர்வரும் ஆறு தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்

அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நினைவு நிகழ்வுகளை தொடர்ந்து முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்தின் கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான  குண்டுவீச்சு தாக்குதலில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவர்களுடைய வளாகத்திலே நண்பகல் பன்னிரண்டு முப்பது மணி அளவில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது

குறித்த வளாகத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான  எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் ஆண்டிஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்றிருந்தனர்

#Tamilmassacre #sencholai #mullivaikal

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More