Home இலங்கை உயிர்த்தஞாயிறு தற்கொலைதாரிகளின் அடையாளம் மரபணு சோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தற்கொலைதாரிகளின் அடையாளம் மரபணு சோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

by admin

உயிர்த்த ஞாயிறு தினமன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் , நீர்கொழும்பு, கட்டுவபிட்டி தேவாலயம் ஆகியவற்றில் தற்கொலை தாக்குதல்களை நடத்திய அலாவுதீன் மொஹம்மட் முவாம், அச்சு மொஹம்மது மொஹம்மது ஹஸ்தூன் அகிய குண்டுதாரிகளின் அடையாளம் மரபணு சோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களது உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட மரபணு மூலக் கூறுகளுடன் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து பெறப்பட்ட அலாவுதீன் மொஹம்மட் முவாத்தின் தலைப் பகுதி மரபணு ஒப்பீடுச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டுவபிட்டி தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட ஹஸ்தூனின் உறுப்புக்களில் இருந்து பெறப்பட்ட மரபணு மூலக் கூறுகள் அவரது இரத்த சொந்தங்களின் மூலக்கூறுகளுடன் ஓப்பிடு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய 7 குண்டுதாரிகள் தொடர்பிலான மரபணு சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் வெலி அங்க தெரிவித்துள்ளார்

#eastersundaylk #DNA

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More