Home இலங்கை இணைப்பு2 – சாவகச்சேரி குப்பை மேட்டில் பாரிய தீ – நீண்ட நேரம் போராடி அணைக்கப்பட்டது

இணைப்பு2 – சாவகச்சேரி குப்பை மேட்டில் பாரிய தீ – நீண்ட நேரம் போராடி அணைக்கப்பட்டது

by admin

தென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் நேற்று (12) இரவு 10.20 மணியளவில் ஏற்பட்டிருந்த பாரிய தீப்பரவல் இன்று (13) அதிகாலை வரை சுமார் இரண்டு மணி நேரமாக  நீடித்தது.  இந்நிலையில், பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து நகராட்சிமன்ற குடிநீர் தாங்கியை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இவ்முயற்சியால், குப்பைகள் முற்றாக எரிந்த நிலையில் அதிகாலை 1.30 – 2.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளது.

இந்த, தீப்பரவல் குறித்து தீயணைப்பு படை மற்றும் 119- அவசர காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இறுதி வரையிலும் அங்கு உரிய அதிகாரிகள் எவரும் வருகை தரவில்லை.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றபோதிலும் விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

சாவகச்சேரி குப்பைமேட்டில் பாரிய தீ

May 12, 2019 @ 20:32

தென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் இன்று (12) இரவு 10.20 மணியளவில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீப்பரவல் இன்று நள்ளிரவு 12.40 மணியளவு வரையிலும் அணைக்கப்படாமல் நீடித்து வருகின்றது. இதுகுறித்து, தீயணைப்பு படை மற்றும் அவசர காவல்துறையிருக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை சம்பவ இடத்திற்கு எவரும் வரவில்லை.

இந்நிலையில், பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

   #chavakacheri  #fire

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More