வட்ஸ்அப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் இணையத்திருடர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகப்புத்தக நிறுவனத்துக்கு சொந்தமான வட்ஸ்அப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, இணையத்திருடர்கள் இதை மேற்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இதனையடுத்து இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வட்ஸ்அப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமை வட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வட்ஸ்அப் செயலியின் புதிய பதிப்பை உடனடியாக நிறுவுறுமாறு தனது 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்களையும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
#வட்ஸ்அப் #இணையத்திருடர்கள் #WhatsApp #hackers #Software
Add Comment