Home இலங்கை வாள் வெட்டு தாக்குதலில் நால்வர் காயம்

வாள் வெட்டு தாக்குதலில் நால்வர் காயம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ் .கச்சாய் பாலாவி தெற்கில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பாலாவி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தினார்கள்.

அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தங்கராசா நிறோஸ் (வயது 28) , தங்கராசா ரஜீவன் (வயது 27) மற்றும் மயூரன் நிரோஷினி (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளை அயலவரான அருணாச்சலம் பொன்னையா (வயது 62) என்பவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த வாள் வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் முகமாகவே இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாராணைகளில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#வாள்வெட்டு #jaffna

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More