Home இலங்கை சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் :

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் யூட் வீதியில் வசித்து வந்த 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதி தனது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எனினும் குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் அச்சிறுவனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பிறின்ஸ்டன் ரயனா என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுவன் எழுதி வைத்த கடிதம் ஒன்றும் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் கடந்த 08-05-2019 அன்று திகதி இடப்பட்டு எழுதப்பட்டுள்ளதோடு,தனக்கும் தனது தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும்,தான் கேட்பவை எவற்றையும் வாங்கித்தருவது இல்லை எனவும், தந்தை 2 ஆம் திருமணம் முடித்தது தனக்கு பிடிக்கவில்லை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா சென்றால் அங்கே தன்னை நன்றாக கவனிப்பார்கள் எனவும்,தான் இந்தியா செல்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் தாயார் இறந்த நிலையில் அவனுடைய தந்தை மறுமணம் செய்ததாக தெரிய வருகின்றது.

குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனையின் பின் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக குறித்த சிறுவனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#death #suicide #doubt #பேசாலை #தூக்கில் # சிறுவனின் #மரணம் #சந்தேகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More