92
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த குறித்த பெண் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரை விசாரணை செய்துள்ளதுடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல் பொருட்களை கைப்பற்றியிருந்த காவல்துறையினர் அதனை அடுத்து குறித்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
#சந்தேகத்திற்கிடமான #ஜெர்மன் #பெண் #கைது #arrest #germany
Spread the love