Home இந்தியா பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் கோரிக்கை!

பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் கோரிக்கை!

by admin

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையில் நிகழ்ந்த அனர்த்தம் குறித்து, தமது கவலையை வெளிப்படுத்தியதுடன், அத்தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தீவிரவாதம் எந்த மதத்தையும் சார்ந்ததில்லை என்பதுடன், உலகின் எந்தப் பாகத்தில் தீவிரவாத செயற்பாடுகள் இடம்பெற்றாலும் முஸ்லிம்களாகிய தாம் அதனைக் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு இலங்கையில் மீண்டும் சமாதானம் திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாகவும் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் ஈ.மொஹம்மட் சென்னையிலுள்ள இலங்கை அதிகாரிகளிடம் கடிதமொன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து அண்மையில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதல்கள் நல்லதொரு அறிகுறியாகத் தென்படவில்லை. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையாளர்கள் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள மொஹம்மட், இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். #TNTJ #தமிழ்நாடுதௌஹீத்ஜமாஅத் #eastersundayattacklk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More