பிரதான செய்திகள் விளையாட்டு

யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். யுவராஜ்சிங் சரியாக விளையாடவில்லை எனத் தெரிவித்து 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலையில் ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அவர் திட்டமிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யுவராஜ்சிங் சிந்தித்து கொண்டிருக்கிறார் எனவும் இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச விரும்புகிறார் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் யுவராஜ்சிங்கிற்கு சில நாடுகளில் நடைபெறவுள்ள 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

37 வயதான யுவராஜ்சிங் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கிண்ணத்தினை வெல்வதற்கு பக்கபலமாக இருந்துள்ளதுடன் அந்த உலக கிண்ணத் தொடரில் 362 ஓட்டங்களுடன் 15 விக்கெட்டும் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

#யுவராஜ்சிங்  #சர்வதேசகிரிக்கெட் #ஓய்வு #yuvrajsingh #resign

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.