Home இலங்கை யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை :

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் சேரும் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மாநகர முதல்வர் இ. ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.மாநகரின் தூய்மை , துர்நாற்றம் அற்ற சூழலை உருவாக்கும் நோக்குடன், வீட்டு திண்ம கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் புதிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கியுள்ளோம். அதன் அடிப்படையில் , திங்கட்கிழமை முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சமையலறை கழிவுகளை அகற்றும் வாகனம் விசேட ஒலியினை எழுப்பியவாறு அதிகாலை 5 மணி முதல் மாநகர சபை எல்லைக்குள் வலம் வரும். அதன் போது குடியிருப்பாளர்கள் தமது வீட்டு சமையலறை கழிவுகளை மாத்திரம் அதன் மூலம் அகற்றலாம்.

சமையலறை கழிவுகளை ஊழியர்களிடம் கொடுக்கும் போது அதனுள் பிளாஸ்ரிக் , கண்ணாடி போன்ற வேற கழிவு பொருட்களை கொடுக்க வேண்டாம். சமையலறை கழிவுகளை மாத்திரம் போடுங்கள். வேறு கழிவுகளை போட்டால் , உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டப்பணமும் விதிக்கப்படும்.

ஏனைய கழிவுகளை இதுவரை நடைமுறையில் உள்ள கழிவகற்றல் பொறிமுறை ஊடாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

 #kitchen waste  #யாழ்.மாநகர சபை   #சமையலறை கழிவு #புதிய நடைமுறை #ஆர்னோல்ட்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More