Home இலங்கை கனரக வாகனத்தில் சிக்குண்டு பெண் பலி

கனரக வாகனத்தில் சிக்குண்டு பெண் பலி

by admin

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் அட்டன் நகரின் மக்கள் வங்கிக்கு அருகாமையில் கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு ; ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக அட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்று (24.05.2019 ) வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் வீதியை கடக்க முயற்சித்த குறித்த வயோதிப பெண் பொகவந்தலாவ பகுதியில் இருந்து அட்டன் குடாகம பகுதிக்கு சென்ற கனரக வாகனத்தில் முன் சில்லில் சிக்குண்டு பலியாகியுள்ளார். பலியான குறித்த பெண் அட்டன் நகரில் யாசகர் தொழில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளனது.

குறித்த வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், விபத்தின் தொடர்புடைய குறித்த சாரதியை கைது செய்துள்ளதாகவும், அவரை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அட்டன் காவல்துறையினர்; தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

  #பெண் #பலி

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More