Home இலங்கை தலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு

தலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு

by admin

தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் புகையிரத பாதையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (25.05.2019) காலை 10 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று காணப்படுவதனைக் கண்டு தலவாக்கலை காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை ஒலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த பெனடிக் ரொஷான் (வயது 23) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் புகையிரதத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து புகையிரத பாதையில் எரிந்து சென்றார்களா அல்லது இவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளாரா என பல கோணங்களில் தலவாக்கலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

#தலவாக்கலை  #புகையிரத பாதை  #சடலம்  #மீட்பு

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More