Home இலங்கை முட்டை விஷமாயிருக்கலாம் எனச் சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழப்பு

முட்டை விஷமாயிருக்கலாம் எனச் சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழப்பு

by admin


யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவர் ஒருவர், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவரது உயிரிழப்புக்கு முட்டை விஷமாயிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சுமார் 17 நாள்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 7 வயது மாணவன் இன்று காலை உயிரிழந்தார் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாணவனின் சகோதரர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாணவனும் அவரது சகோதரர்களும் உட்கொண்ட முட்டை விஷமாகியதால் ஒவ்வாமை ஏற்பட்டு சுகயீனத்துக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்ட போதும் இறப்பு விசாரணையின் பின்னரே காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

#முட்டை  #மாணவன்  #உயிரிழப்பு #சென். ஜோன்ஸ் கல்லூரி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More