Home இலங்கை அமித் வீரசிங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் :

அமித் வீரசிங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் :

by admin


இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை எதிர்வரும் 04ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்த நிலையில் இன்றைய தினம் சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பில் ஆராய்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

சந்தேகநபர் இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாகதாகவும் அவருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருதாகவும் தெரிவித்த காவல்துறையினர், பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை எதிர்வரும் 04ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#அமித் வீரசிங்க  #விளக்கமறியல் #மகசொகன் பலகாய

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More