Home இலங்கை இலங்கைக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது…

இலங்கைக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது…

by admin

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் நாளை சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட 3000 ரூபாய் நாளை முதல் 3500 ரூபாயாக அதிகரிக்கப்படுவதுடன் ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த 10,000 ரூபாய் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விசேட கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2000 ரூபாயில் இருந்து 2500 ரூபாவாகவும், ஒருநாள் சேவையின் போது 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More