Home இலங்கை சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணினி கண்டெடுப்பு

சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணினி கண்டெடுப்பு

by admin


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணினி , பணம், தங்க நகைகள் என்பன இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனையிலுள்ள கால்வாயிலிருந்து மடிக்கணினி மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானினால் அம்பாறை மாவட்டததுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை சியாம் என்பவர் வழங்கிய தகவலுக்கமையவே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் 15 இலட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் இன்று 35 இலட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சஹ்ரானின் சகோதரர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தினமன்றே மடிக்கணினி, பணம் என்பவற்றை தான் பெற்றுக்கொண்டதாக, கல்முனை சியாம் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குறித்த மடிக்கணினியை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#சஹ்ரான்   #மடிக்கணினி #கண்டெடுப்பு #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More